×

வெள்ள பாதிப்புக்கு சல்லி காசு கூட வழங்காத பிரதமர் மோடி தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் 1 தொகுதியிலும் பாஜ வெற்றி பெறாது: செல்வப் பெருந்தகை ஆவேசம்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எவர் மீது ஊழல் வழக்கு இருக்கிறதோ, அவர்கள் பாஜவில் சேர்ந்ததும் புனிதமானவர்களாக மாறி விடுகிறார்கள். இதுதான் பிரதமர் மோடியின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை. ஊழலுக்கு துணை போகிற பிரதமர் மோடியின் ஊழல் ஒழிப்பு நாடகம் தொடர்ந்து அம்பலபடுத்தப்பட்டு வருகிறது. நேற்று சென்னை தி.நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பாண்டி பஜாரில் பிரதமர் மோடி வாகன அணிவகுப்பு நடத்தினார். ஆனால், எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என பாஜவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் அளவற்ற பாசம் கொண்டிருப்பதாக தமது டிவிட்டர் பக்கத்தில் மோடி செய்தி வெளியிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது நிவாரண நிதியாக ரூ.37,000 கோடி கேட்டதில் இதுவரை ஒரு சல்லிக்காசு கூட பிரதமர் மோடி வழங்கவில்லை. தமிழகத்தில் நிகழ்ந்த வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக கருத முடியாது என நிர்மலா சீதாராமன் கூறி, நிதி வழங்க மறுத்து விட்டதை தமிழ் மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்.எனவே, தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வருகை புரிந்தாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத வகையில் பாஜவுக்கு உரிய பாடத்தை தமிழக வாக்காளர்கள் நிச்சயம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள்.

The post வெள்ள பாதிப்புக்கு சல்லி காசு கூட வழங்காத பிரதமர் மோடி தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் 1 தொகுதியிலும் பாஜ வெற்றி பெறாது: செல்வப் பெருந்தகை ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,BJP ,Congress ,President ,Selvaperunthagai ,
× RELATED மோடியின் கீழ்த்தரமான பிரசாரத்தால்...